கோயிலை இடிக்க நோட்டீஸ்

தென்காசி மாவட்டம் செங்கோட்டை மேலூர் கிராமம் கே.சி ரோட்டில் அமைந்திருக்கும் ஸ்ரீ ராமபக்த ஆஞ்சநேயர் திருக்கோயில், செங்கோட்டைக்குளம் ஏரியின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து இருப்பதாகக் கூறி, அக்கோயிலை இடிப்பதற்கு தமிழக அரசின் பொதுப் பணித்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஹிந்துக்களின் கோயில்களை இடிப்பதில் மட்டுமே குறியாக இருக்கிறது விடியல் அரசு. ஆனால், தமிழகம் முழுக்க எத்தனையோ இடங்களில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள சர்ச்சுகள், மசூதிகள் மட்டும் ஏனோ அதன் கண்களுக்குத் தெரிவதில்லை, மாற்று மத வழிபாட்டுத் தலங்களின் தேவைக்கு ஏற்ப அரசும் அதன் விதிமுறைகளும் வளைந்து கொடுக்கிறதா? என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.