விசாரணையில் திருப்தி இல்லை

கேரள மாநிலம் பாலக்காடு, எலப்புள்ளி பகுதியை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தொண்டர் சஞ்ஜித் சில முஸ்லிம் பயங்கரவாதிகளால் பட்டப்பகலில் அவர் மனைவி மற்றும் பொதுமக்கள் கண் எதிரிலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவரது வீட்டுக்கு சென்ற மளையாள நடிகரும் எம்.பியுமான சுரேஷ் கோபி, சஞ்ஜித்தின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், சஞ்ஜித் கொலை நடந்த பின் முறையாக விசாரித்திருந்தால் குற்றவாளிகளை பிடித்திருக்கலாம். கொலையாளிகள் தப்புவதற்கு காவல்துறையினர் வழி அமைத்துக் கொடுத்துள்ளனர். விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மாநில அரசின் விசாரணையில் திருப்தி இல்லை’ என கூறினார்.