ஒவைசிக்கு நோஸ்கட்

ஊடகம் ஒன்றுக்கு நேற்றறு பேட்டி அளித்த அகில இந்திய மஜ்லிஸ் இ இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏ.ஐ.எம்.ஐ.எம்) கட்சித் தலைவர் அசாசுதீன் ஓவைசி, “மதச்சார்பின்மையை அழிக்கவும், நாட்டில் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கவும் பா.ஜ.க விரும்புகிறது. ஹிஜாப் அணிந்த பெண் ஒருவரை நாட்டின் பிரதமராக பார்க்க நாங்கள் விரும்புகிறோம். ஹலால் இறைச்சி, முஸ்லிம்களின் தொப்பி மற்றும் தாடி ஆகியவற்றால் தங்களுக்கு ஆபத்து இருப்பதாக பா.ஜ.க நினைக்கிறது. அவர்களின் உணவுப் பழக்கவழக்கங்களில் சிக்கல்கள் உள்ளன. அக்கட்சி உண்மையில் முஸ்லீம் அடையாளத்திற்கு எதிரானது. பாரதத்தின் பன்முகத்தன்மை மற்றும் முஸ்லிம் அடையாளத்தை முடிவுக்குக் கொண்டுவருவதே பா.ஜ.கவின் உண்மையான செயல்திட்டமாக உள்ளது” என கூறினார். இதற்கு பதில் அளித்த பா.ஜ.கவின் ஷெஹ்சாத் பூனவல்லா தனது டுவிட்டர் பதிவில் “ஹிஜாப் அணிந்த பெண் பரதத்தின் பிரதமராக வருவார் என்று ஒவைசி நம்புகிறார்! சரி, அரசியலமைப்புச் சட்டம் யாரையும் தடை செய்யவில்லை, ஆனால் ஹிஜாப் அணிந்த ஒரு பெண் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவராக எப்போது வருவார் என்று சொல்லுங்கள்? அதிலிருந்து ஆரம்பிக்கலாமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.