யாரும் பின்தங்கி விடக்கூடாது

ஐ.நா இரண்டாவது உலக புவிசார் தகவல் கூட்டம் ஹைதராபாத்தில் நேற்று துவங்கியது. இக்கூட்டத்தில் காணொளிகாட்சி வாயிலாக பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, “தொழில்நுட்பமும், திறமையும் பாரத வளர்ச்சி பயணத்திற்கான இரண்டு தூண்கள். தொழில்நுட்பம் நமக்கு மாற்றத்தைக் கொண்டு வருகிறது. சிறந்த கண்டுபிடிப்பு திறனுடன் இளைஞர்களை கொண்ட தேசம் பாரதம். தொழில் துவங்குவதில் முதன்மையான நாடாக பாரதம் உள்ளது. 2021ம் ஆண்டு முதல் தொழில் துவங்குபவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. பாரதத்தில் தற்போது வங்கி கணக்கு இல்லாத 450 மில்லியன் பாரத மக்களுக்கு வங்கி சேவை வழங்கப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த அமெரிக்க மக்கள் தொகையை விட அதிகம். காப்பீடு இல்லாத 135 மில்லியன் மக்களுக்கு காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த பிரான்ஸ் மக்கள் தொகைக்கு ஈடானது. மேலும், 110 மில்லியன் குடும்பங்களுக்கு சுகாதார வசதி செய்து தரப்பட்டுள்ளது. 60 மில்லியன் குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. யாரும் பின்தங்கி விடக்கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது” என தெரிவித்தார்.