இனி அதிகாரிகளும் பொறுப்பு

தேசிய நெடுஞ்சாலை, பாலங்கள், சாலைகள், உட்கட்டமைப்புகள் அமைக்கும்போது உரிய தரக்கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். விதிமுறைகளை பின்பற்றாமல் உரிய கண்காணிப்புகள் இன்றி தவறு நிகழ்ந்தால் நெடுஞ்சாலை அலுவலகத்தின் மண்டல அலுவலக அதிகாரிகள், பொறியாளர்கள், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், உட்கட்டமைப்பு மேம்பாட்டு ஆணையம் ஆகியவைகளே பொறுப்பேற்க வேண்டும். பணிகளில் அலட்சியம் காட்டும் அதிகாரிகளின் தவறு மூன்று முறைக்கு மேல் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளளது. முன்னதாக, இக்குறைபாடுகளுக்கு ஒப்பந்ததாரர், தனிப்பட்ட பொறியாளர், கண்காணிப்புப் பணி ஆலோசகர்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டது.