கூட்டணி தேவையில்லை

தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய தி.மு.க மூத்த தலைவரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான ஐ. பெரியசாமி, “நேரத்தை துளியும் வீணடிக்காமல், முதல்வர் ஸ்டாலின் ஓய்வில்லாமல் பணியாற்றி வருகிறார். அவரை பார்க்கும்போது எல்லாருக்கும் ஒரு உற்சாகம் வந்து விட்டது. நாடாளுமன்ற தேர்தலில் நாம் வெற்றி பெற்று விடுவோம் என்று பா.ஜ.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் நினைக்கின்றன. ஆனால், எல்லா கட்சியும், ஒன்றாக சேர்ந்தாலும், தி.மு.க தனித்து நின்று வெற்றி பெறும் அளவிற்கு நாங்கள் தயார்” என்று கூறினார். அவரது இந்த கருத்து தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சி தொண்டர்களிடயே சலசலப்பையும் வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.