என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை

சேலம் செட்டிச்சாவடி பகுதியில் வீடு வாடைகைக்கு எடுத்து யூடியூப் பார்த்து, வீட்டிலேயே துப்பாக்கி தயாரித்த வழக்கில் நவீன் சக்ரவர்த்தி, சஞ்சய் பிரகாஷ், அவர்களுக்கு உதவிய கபிலர் என்பவர்களது வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இவர்கள் புரட்சியாளர்களாக மாறும் நோக்கத்தில் துப்பாக்கி தயாரித்ததாக தெரியவந்துள்ளது. இதேபோல, சிவகங்கை கல்லூரி சாலையில் வசித்து வரும் கார் டிரைவர் விக்னேஷ் என்பவர், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி. இவருக்கு விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பு உள்ளதாக புகார் எழுந்தது. அவரது வீட்டிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில் சில கையேடுகள், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் புகைப்படம், புத்தகங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றியுள்ளனர்.