என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகை தாக்கல்

ஆசாம் மாநிலம், குவஹாத்தியில் சென்ட்ரல் மால், ஆர்.ஜி.பி சாலையின் அருகே காவலர்கள் குழு மீது இரண்டு உல்பா பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசிய சம்பவத்தில் பன்னிரண்டு பேருக்கு காயம் ஏற்பட்டது. இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட பப்பு கோச் போகோலியால், அம்ரித் பல்லவ் கோஸ்வாமி, பரேஷ் பாருஹ், அருணோதோய் தஹோதியா, முன்னா பாருக் ஆகிய ஐந்து குற்றவாளிகளுக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) குவஹாத்தியில் உள்ள என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.