6 பேரை கைது செய்த என்.ஐ.ஏ

பாகிஸ்தானுடன் தொடர்புடைய சமூகவிரோத கும்பலை சேர்ந்தவர்களை பிடிக்க, தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) அதிகாரிகள் 8 மாநிலங்களில் 70 இடங்களில் தீவிர சோதனை நடத்தினர். அதனைத் தொர்ந்து நேற்று இதில் சம்பந்தப்பட்ட   லக்கி கோஹர், லக்வீர் சிங், ஹர்ப்ரீட், டலிப் பிஷ்னோய், சுரிந்தர் மற்றும் ஹரி ஓம் ஆகிய 6 பேரை கைது செய்துள்ளனர். இந்த பிரிவினைவாத குழுவினரும் சமூகவிரோத கும்பல்களை சேர்ந்தவர்களும் பணத்துக்காக பிரபலங்கள், தொழிலதிபர்கள் போன்றோரை கடத்துவது, கொலை செய்வது, போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக என்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத்தவிர டெல்லியை சேர்ந்த பிரபல ரௌடி கௌஷல் சௌத்ரி பிடிபட்டார். ஹரியானாவை சேர்ந்த ரௌடி சிக்கு, நீரஜ் பவானா, பஞ்சாபை சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய்,உத்தரப் பிரதேசத்தின் தில்பாக் சிங் உள்ளிட்டோரும் இவ்வழக்கில் சிக்கியுள்ளனர்.