புதிய கழிவகற்றி தொழில்நுட்பம்

ரயிலில் தற்போது அமைக்கப்படும் பயோ டாய்லெட் என்பது விலை கூடுதலானது. மேலும் உயிரி கழிவறைகள் தொழில்நுட்பத்தால் பயணிகள் தூக்கி எறியும் பிளாஸ்டிக், துணி வகைகளை சிதைத்து அழிக்க முடியாது. இதனை செப்ரோலு பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் ஆர் வி கிருஷ்ணய்யா, ஓடும் ரயில்களிலிருந்து கழிவறை கழிவுகளை சேகரித்து, அவற்றை பிரித்து, பயன்படுத்தக் கூடிய பொருட்களாக மாற்றும் தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார். இது பயோ டாய்லெட்டைவிட ஏழு மடங்கு விலை குறைவான எளிய தொழில்நுட்பம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் மேம்பட்ட உற்பத்தி தொழில்நுட்பங்கள் திட்டத்தின் ஆதரவுடன் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையிலான இந்த தொழில்நுட்பம், 5 தேசிய காப்புரிமைகளைப் பெற்று தற்போது சோதனைக் கட்டத்தில் உள்ளது. இந்த தானியங்கி அமைப்புமுறை மூன்று அம்சங்களைக் கொண்டுள்ளது. ரயில் பாதையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர் சேகரிப்பான் அமைப்பு, வானொலி அதிர்வெண் அடையாள உணரி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கழிவுநீர் தொட்டி இருக்கும் இடத்திற்கு ரயில் நெருங்கும்போது மேல் மூடி திறக்கப்படும். ரயிலில் உள்ள கழிவு பொருட்கள் கழிவுநீர் தொட்டியில் விழும். ரயில் அங்கிருந்து சென்றதும் கழிவுநீர் தொட்டியின் மூடி தானாக மீண்டும் மூடிக்கொள்ளும். இதற்கான சோதனைகள் முடிவடைந்து அனுமதி பெற்றால், ரயில்வே துறைக்கு பெரிய அளவில் செலவுகள் குறையும்.