புதிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு லலித் ஓய்வு பெற்றதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் புதிய அடுத்த தலைமை நீதிபதியாக டி.ஒய் சந்திரசூட் நேற்று பதவியேற்றார். டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் அவருக்கு குடியரசுத் தலைவர்  திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். 50வது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள டி.ஒய்.சந்திரசூட், 2024ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி வரை 2 ஆண்டுகளுக்கு இந்த பொறுப்பு வகிப்பார். இவரது தந்தை ஒய்.வி சந்திரசூட்டும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அவர் இந்த பதவியில் 1978 முதல் 1985 வரை இருந்தார். இதனால், இப்பதவியை மிக நீண்டகாலம் வகித்தவர் என்ற பெருமை பெற்றவர்.