பாலியல் பாதிரி மீது புதிய புகார்

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பாத்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்தவ பாதிரி பெனடிக்ட் ஆண்ட்ரோ. கடந்த சில நாட்களுக்கு முன் இந்த பாதிரி, இளம்பெண்களுடன் நெருக்கம், வீடியோ காலில் நிர்வாணமாக பேசுதல், ஆபாசமாக சேட்டிங் என செய்த லீலைகள் சமூகவலைத் தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்த நர்சிங் மாணவி கொடுத்த புகாரின் பேரில் 5 பிரிவுகளின் கீழ் பாதிரி பெனடிக்ட் மீது சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனை அறிந்த பாதிரி தலைமறைவானார். பின்னர் கடந்த 20ம் தேதி நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் பதுங்கியிருந்த அவரை காவலர்கள் கைது செய்தனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் பாதிரி மீது மேலும் 4 பெண்கள் புகார் அளித்திருந்தனர். மேலும், ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகள், மருமகள் என 3 பேரிடம் இந்த கிறிஸ்தவ பாதிரி ஆபாச சேட்டிங்கில் ஈடுபட்டிருந்ததும் தெரிய வந்தது. இந்த சூழலில், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண், தற்போது பாதிரி பெனடிக்ட் ஆண்ட்ரோ மீது புதிதாக ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கடந்த 2022ம் ஆண்டு பாதிரி பெனடிக்ட் உடன் தான் செல்போன் வாட்ஸ்அப் மூலம் சாட்டிங் செய்ததாகவும் பின்னர் அவரது நடவடிக்கை பிடிக்காததால் ஒதுங்கிக் கொண்டதாகவும் கூறினார். ஆனாலும் பாதிரி பெனடிக்ட், தனக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறியுள்ளார். இந்த புகாரின் மீதும் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.