புதிய ராணுவ துணைத் தளபதி

லெப்டினன்ட் ஜெனரல் சி.பி மொகந்தி திங்கள்கிழமை பதவியில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்து, லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே, நேற்று ராணுவத் துணைத் தளபதியாக பொறுப்பேற்றார். லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே டிசம்பர் 1982ல் கார்ப்ஸ் ஆஃப் இன்ஜினியர்ஸ் (தி பாம்பே சாப்பர்ஸ்) க்கு நியமிக்கப்பட்டார். இவர் இங்கிலாந்தில் உள்ள கேம்பர்லி கல்லூரியில் பட்டம் பெற்றவர் மற்றும் உயர் கட்டளை (HC) மற்றும் தேசிய பாதுகாப்பு கல்லூரி (NDC) பயின்றவர். ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைப் பொறியாளராகவும் பணியாற்றினார். 39 ஆண்டுகால சிறப்புமிக்க ராணுவ வாழ்க்கையில், தேசமெங்கும் பல்வேறு சவாலான சூழல்களில் பணியாற்றியுள்ளார்.