நீட் கருத்து தெரிவிக்க அழைப்பு

‘நீட்’ தேர்வு குறித்து பொது மக்கள் தங்களின் கருத்துகளை நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவிடம் தெரிவிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நீட் தேர்வு வாயிலாக மருத்துவ சேர்க்கையில் மாணவர்களுக்கான சாதகங்கள், பாதிப்புகள் குறித்து பொது மக்கள் தங்களின் கருத்துகளை ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் தபால் அல்லது neetimpact2021@gmail.com என்ற மின்னஞ்சல் அல்லது நேரடியாக மருத்துவ கல்வி இயக்ககத்தில் வைக்கப்பட்டுள்ள தனிப்பெட்டியில் வரும் 23ம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம் கூறப்பட்டுள்ளது.