தாய்மதம் திரும்பிய சொந்தங்கள்

மத்தியப் பிரதேச மாநிலம் தமோஹ் மாவட்டத்தில் 250க்கும் அதிகமானோர் தாய்மதம் திரும்பினர். வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்ற வேள்வியில் பங்கேற்ற இவர்கள் சனாதன தர்மத்தை ஏற்று தாய்மதம் திரும்பினர். சத்தீஸ்கர் மாநிலத்தில் துறவியர்கள், அகில பாரத தாய்மதம் திருப்பும் இயக்க ப்ரமுக் ப்ரதாப் சிங் ஜுதேவ் முன்னிலையில் கில்கிலேஷ்வர் கோயிலில் 50 குடும்பத்தினர் கிறிஸ்தவ மதத்தைத் துறந்து மீண்டும் சனாதன தர்மத்தை ஏற்று தாய் மதம் திரும்பினர். இதேபோல சமீபத்தில் சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் 20 குடும்பங்கள் தாய்மதம் திரும்பினர். உத்தரப் பிரதேசம் புலந்த்சஹரில் 20 குடும்பத்தினர் தாய்மதம் திரும்பினர்.