முஸ்லீம் லீக் கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தேசியக் கொடியை அவமதித்ததாக 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முஸ்லீம் லீக் கொடிக்கம்பத்தில் அந்த கட்சியின் சின்னத்திற்கு கீழே தேசியக் கொடி ஏற்றப்பட்டிருந்தது. இதுகுறித்த சி.பி.ஐ (எம்) கிளைக் குழு நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அக்கட்சியினர் நான்கு பேர் மீது கம்பளக்காடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.