ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் தேசியக்கொடி

ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) தலைவர் டாக்டர் மோகன் பாகவத், நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். தேசியக்கொடி ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தினர்.