கல்லூரிகளுக்கு பெயர் சூட்டல்

டெல்லி பல்கலைக் கழகத்தின் புதிய கல்லூரிகள் மற்றும் கல்வி மையங்களுக்கு சுவாமி விவேகானந்தர், சர்தார் படேல், சுஷ்மா ஸ்வராஜ், அடல்பிஹாரி வாஜ்பாய், வீர சாவர்க்கர், சாவித்ரி பாய் புலே, அருண் ஜெட்லி, சௌத்ரி பிரம்ம பிரகாஷ் ஆகியோரின் பெயர்களை பரிசீலிக்க நிர்வாகக் கவுன்சில் பரிந்துரைத்துள்ளது. இதைத்தவிர சி.டி. தேஷ்முக் மற்றும் பேராசிரியர் அமர்த்தியா சென் போன்றோர்களின் பெயர்களும் முன்மொழியப்பட்டுள்ளன. இந்த பெயர் சூட்டுவதில் இறுதி முடிவுகளை எடுக்கும் அதிகாரம் துணைவேந்தருக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களுக்கு பெயர் சூட்டுவது தொடர்பாக டெல்லி பல்கலைக் கழகத்தால் எந்த எதிர்ப்பும் எழுப்பப்படவில்லை. முன்னதாக, மக்களவையில் கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி., கொடிக்குன்னில் சுரேஷ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய கல்வியமைச்சர், கல்லூரிகள் மற்றும் மையங்களுக்கு மரைந்த முன்னாள் தலைவர்களின் பெயர்களை செயற்குழு அங்கீகரித்துள்ளதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.