நபார்டு கடனுதவி

தலைமை செயலகத்தில் நபார்டு வங்கியின் தலைவர் ஜி.ஆர்.சிந்தலா, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து உரையாடினார். அப்போது, நபார்டு வங்கியின் ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ், 3,000 கோடி ரூபாய் வரை உதவி வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில், தமிழகத்திற்கு நபார்டு வங்கி உதவி, 40 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும். இது கடந்தாண்டு, 27 ஆயிரத்து, 40 கோடி ரூபாயாக இருந்தது. மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில், தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில், ‘அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி’ என்ற லட்சியத்தின் அடிப்படையில், நபார்டு வங்கிக்கும், எஸ்.பி.ஐ., வங்கிக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது.