பட்டியலினத்தவரை அவமானப்படுத்திய முஸ்லிம்கள்

பீகார் மாநிலம் மகேசரி கிராமத்தில் வசிக்கும் பட்டியலின இளைஞரான பஸ்வான், அருகில் இருந்த சகாபிப் கிராமத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண்ணுடன் காதல் கொண்டார். அந்த பெண்ணுடன் அவர் சென்றபோது பார்த்த சகாபிப் பகுதி முஸ்லிம்கள், அந்த இளைஞரை பிடித்து கடுமையாகத் தாக்கினர். பிறகு ஒரு அறையில் முஸ்லிம் மதகுருவுக்கு முன்னால் அவரை மண்டியிட வைத்தனர். அந்த மௌலானா தரையில் துப்பிய எச்சிலை ஐந்துமுறை அந்த பட்டியலின இளைஞரை நக்கவைத்து அவமானப்படுத்தினர். பின்னர் அந்த இளைஞர் விடுவிக்கப்பட்டு செல்ல அனுமதிக்கப்பட்டார். இந்த வீடியோ இணையதளங்களில் பரவியதையடுத்து இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, அந்த இளைஞர் விடுவிக்கப்பட்டு செல்ல அனுமதிக்கப்பட்டார். அப்பகுதி காவல் நிலைய பொறுப்பாளர் சந்தீப் பால் கூறுகையில், வீடியோ தனக்கு கிடைத்துள்ளது, அதன் அடிப்படையில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.