கர்நாடகாவில் தொடரும் கொலைகள்

கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பா.ஜ.க இளைஞரணி மாவட்ட நிர்வாகி பிரவீன் நட்டார் கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த கொடூர கொலை சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொடூர கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ஜாகீர் , சஃபிக்யூ ஆகிய இரண்டு முஸ்லிம் அடிப்படைவாதிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக, எஸ்.டி.பி.ஐ., பி.எப்.ஐ. ஆகிய அமைப்புகளை சேர்ந்த 21 பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அங்கு மேலும் ஒரு கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. அம்மாவட்டத்தின் சூரத்கல் மங்கல்பெட் பகுதியை சேர்ந்த முகமது பைசல் என்ற இளைஞர் அப்பகுதியில் உள்ள ஒரு துணிக்கடைக்கு வெளியே இரவு 8 மணியளவில் நின்றுகொண்டிருந்தார். அப்போது, அங்கு பைக்கில் முகமூடி அணிந்து வந்த கும்பல் பைசலை கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொண்டு கடுமையாக தாக்கியது. இதில் படுகாயமடைந்த முகமது பைசல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். பைசல் மீது தாக்குதல் நடத்திய கும்பலை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது. முஸ்லிம் மதத்தின் சன்னி பிரிவை சேர்ந்த பைசல் ஷியா பிரிவை சேர்ந்த பெண்ணை முகமது பைசல் காதலித்து வந்ததாகவும், இதற்கு பெண்ணின் தரப்பில் காதலுக்கு எதிர்ப்பு எழுந்ததாகவும் இதன் காரணமாக பைசல் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.