மதம் மாறாததால் கொலை

டெல்லியில் வசிக்கும் தப்லு சிங் என்ற இளைஞன் தனது வீட்டருகே இருக்கும் லாட்லி என்ற ஒரு முஸ்லிம் பெண்ணை காதலித்தான். அப்பெண்ணின் சகோதரன் ஃபர்ஹான், அவளது தாய் மாமன் ஷா ஆலம் ஆகியோர் இந்த காதலை கண்டித்தனர். அதனையடுத்து அந்த பெண்ணை அவள் சம்மதத்துடன் மணக்க காவல் நிலையத்தில் மனு அளித்தான் தப்லு. இதனை அறிந்து தப்லுவின் வீட்டிற்கு வந்த ஷா ஆலம், தங்கள் வீட்டு பெண்ணை மணக்க தப்லு முஸ்லிமாக மாற வேண்டும், அதற்கு 2 லட்சம் பணமும் தருகிறோம். இல்லை எனில் விலக வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு தப்லு ‘நான் ஹிந்துவாக பிறந்தவன், சௌஹான், எக்காரணம் கொண்டும் மதம் மாறமாட்டேன்’ என மறுத்துள்ளான். அந்த பெண்ணை தொடர்ந்து அவன் காதலித்ததால், பெண்ணின் சகோதரனும் தாய் மாமனும் தப்லுவின் கழுத்தில் குத்திக் கொன்றுள்ளனர். ரஜோரி காவல்நிலையத்தில் அவர்கள் இருவர் மீதும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.