மணல் கடத்தல் புகாரால் கொலை

தி.மு.க ஆட்சியில் தமிழகத்தில் மணல் கொள்ளை கனிமவளக் கொள்ளை போன்றவை அரசியல்வாதிகளின் ஆசியோடு சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே, முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் என்ற அரசு ஊழியரை இரண்டு மர்ம நபர்கள் கிராம நிர்வாக அலுவலம் புகுந்து வெட்டினர். இதில் படுகாயமுற்ற பிரான்சிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரான்சிஸ் சில நாட்களுக்கு முன்னர் அப்பகுதி மணல் கடத்தல் பற்றி காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்தார். இந்த சூழலில் தான் இந்த கொலை நிகழ்த்தப்பட்டு உள்ளது. எனவே, அந்த மணல் கடத்தலில் சம்பந்தப்பட்டவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதனையடுத்து ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.