முஹரம் ஊர்வலம் அனுமதி இல்லை

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் அமலில் உள்ளதால், உத்தரப் பிரதேச அரசு, முஹரம் பண்டிகையை ஒட்டி நடத்தப்படும் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்படாது என்று அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை உத்தரபிரதேச டி.ஜி.பி முகுல் கோயல் பிறப்பித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், அனைத்து காவல் நிலையத் தலைவர்களுக்கும் ஊர்வலம் நடத்தப்படாமல் அமைதி நிலவுவதை உறுதி செய்ய வேண்டும். அந்தந்த பிராந்தியங்களில் உள்ள மத நிர்வாகத் தலைவர்கள் இதற்காக உரிய நடவடிக்கை எடுத்து அமைதியை உறுதிப்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.