தாய்மை போற்றுவோம் திட்டம்

மத்திய அரசு உதவியுடன் ‘பிரதமரின் தாய்மையை போற்றுவோம் திட்டம்’ மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் அமலாக்கப்படுகிறது. இதன்படி கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு 3 தவணைகளில் ரூ. 5 ஆயிரம் வழங்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள்,பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர் அல்லது இதே போன்ற பயன்களை வேறு ஏதாவது ஒரு திட்டத்தில் பெறுபவர்கள் இதில் இருந்து விடுக்கப்பட்டுள்ளனர். 25.01.2022 வரை இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 2,58,07,111 பெண்கள் பயனடைந்துள்ளனர். இவர்களுக்கு மொத்தம் ரூ. 9,791.28 கோடி விநியோகிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 12,86,906 பயனாளிகளுக்கு ரூ. 356.56 கோடி வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பயனாளிகள் எண்ணிக்கை 26,042. அவர்களுக்கு வழங்கப்பட்டத் தொகை ரூ. 11.37 கோடி என அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.