பணமும் மதுவும் ஆறாக ஓடும்

கோவையில் நிருபர்களிடம் பேசிய பா.ஜ.க சிறுபான்மைப் பிரிவு தேசிய செயலாளர் வேலுார் இப்ராஹிம், ‘தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது. கோயில்களின் தங்க நகைகளை உருக்கக்கூடாது. இது பக்தர்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் செயல். நகைகளை உருக்கும் திட்டத்தில் ஊழல் நடக்க வாய்ப்புள்ளது. கோவையின் பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். இதனால், உள்ளாட்சி தேர்தலில் பணமும் மதுவும் ஆறாக ஓடும். இல்லத்தரசிகள் தங்களது மாங்கல்ய பலத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்’ என கூறினார்.