பிரிக்சில் மோடி உரை

பிரிக்ஸ் வர்த்தக மன்றம் 2022ன் துவக்க விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ‘வளர்ந்து வரும் பொருளாதாரங்களின் இந்தக் குழு, சர்வதேச வளர்ச்சியின் உந்துசக்தியாக வளரும் என்ற நம்பிக்கையோடு பிரிக்ஸ் அமைப்பு நிறுவப்பட்டது. ஒட்டுமொத்த உலகமும் கொரோனா தொற்றுக்குப் பிந்தைய நிவாரணத்தில் இன்று கவனம் செலுத்தி வரும் வேளையில், பிரிக்ஸ் நாடுகளின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. பெருந்தொற்றினால் ஏற்படும் பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொள்வதற்காக “சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம்” என்ற தாரக மந்திரத்தை பாரதத்தில் நாங்கள் பின்பற்றுகிறோம். விரைவாக வளர்ந்து வரும் மாபெரும் பொருளாதாரமாக உருவாகும் வகையில், இந்த ஆண்டு 7.5 சதவீத வளர்ச்சியை நாங்கள் எதிர்பார்க்கிறோம். வளர்ந்து வரும் ‘புதிய பாரதத்தின்’ ஒவ்வொரு துறையிலும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. பாரதத்தின் தற்போதைய பொருளாதார மீட்சியின் முக்கிய தூணாக தொழில்நுட்ப வளர்ச்சி விளங்குகிறது. பெருந்தொற்றின் போதும், எளிதான வர்த்தகத்தை மேற்கொள்வதற்கான ஏராளமான நடவடிக்கைகளை பாரதம் தொடர்ந்து எடுத்து வந்தது. உள்கட்டமைப்பின் மேம்பாடு மற்றும், அவற்றை விரிவுபடுத்தும் பணிகள் மிகப்பெரும் அளவில் பாரதத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது பாரதத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளைப் போல உலக அரங்கில் இதுவரை நடைபெற்றதில்லை. விண்வெளி, கடல்சார் பொருளாதாரம், பசுமை ஹைட்ரஜன், தூய்மையான எரிசக்தி, டுரோன்கள், புவி சார்ந்த தரவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு உகந்த கொள்கைகளை நாங்கள் உருவாக்கியுள்ளோம். உலகளவில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான சிறந்த சூழல்களுள் ஒன்றாக பாரதம் உள்ளது. அதிகரித்து வரும் பாரத ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கை இதை பிரதிபலிக்கிறது. அரசின் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளில் கூடுதல் வெளிப்படைத் தன்மையையும், நிலைத்தன்மையையும் கொண்டு வருவதற்கான பணிகள் மாபெரும் அளவில் நடைபெற்று வருகின்றன’ என கூறினார்.