மோடி காஷ்மீர் தலைவர்கள் கூட்டம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடத்துவது, மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து பிரதமர் மோடி, காஷ்மீர் மாநில அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதனை ஏற்று காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு அரசியல் கட்சிதலைவர்கள் தலைநகர் புதுடில்லியில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்தனர். மூன்றரை மணி நேரம் நடைபெற்ற அக்கூட்டத்தில், காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்தை வழஙகுவது, மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடத்துவது, காஷ்மீர் பண்டிட் இனத்தவர்ளை மீண்டும் குடியமர்த்துவது, அரசியல் கட்சி தலைவர்களை விடுவிப்பு உள்ளிட்ட சில முக்கிய அம்சங்கள் வலியுறுத்தப்பட்டன. இக்கூட்டத்தில் பங்கேற்றவர்கர்கள், கூட்டம் அமைதியான முறையில் நடந்தது. நம்பிக்கைதருவதாக அமைந்தது என தெரிவித்தனர்.