வாரணாசியில் மோடி

தனது தொகுதியான வாரணாசிக்கு நேற்று சென்ற பிரதமர் மோடி, பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் 100 படுக்கைகள் கொண்ட தாய் சேய் மருத்துவ பிரிவு, கோடவுலியாவில் பல அடுக்கு வாகன நிறுத்தம், கங்கை நதியில் ரோ-ரோ படகுகள் மூலம் சுற்றி பார்க்கும் திட்டம், வாரணாசி- காசிப்பூர் மூன்று வழி மேம்பாலங்கள், ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் 143 கிராமப்புற குடிநீர் மற்றும் ஊரக திட்டங்கள், ருத்ராக் என்ற சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மாநாட்டு மையம் வீட்டுத் தோட்ட வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை துவக்கி வைத்தார். இதன் மூலம், ரூ. 744 கோடி மதிப்பிலான திட்டங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், ரூ. 839 கோடி மதிப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ‘கொரோனா பெருந்தொற்றை எதிர்த்து, பாரதத்தின் மிகப்பெரிய மாநிலமான உத்திர பிரதேசத்தில், அரசு மிகச் சிறப்பாக செயல்பட்டது. அரசு எடுத்த நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. நாட்டில் அதிகம் பேருக்கு, உ.பியில் தான் தடுப்பூசி போடப்பட்டுஉள்ளது. அனைவருக்கும் இலவச தடுப்பூசி என்பதே அரசின் இலக்கு’ என்று கூறினார்.