மோட்ச தீபம்

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தளபதி பிபின் ராவத் மற்றும் உயிரிழந்த ராணுவ அதிகாரிகளின் முக்திக்காக, காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில், மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. இதேபோல இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு ஹிந்து அமைப்புகள், பா.ஜ.கவினர், பொதுமக்கள் என பலரும் ஆங்காங்கே மோட்ச தீபம் ஏற்றினர்.  பாரதமெங்கும் பல்வெறு இடங்களில் அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.