உலக சாதனை புத்தகத்தில் மிசோரம் போலீஸ்

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரம் மாநில காவல் துறையினர் கடந்த மே மாதத்தில் 468 வெளிநாட்டு கடத்தல் விலங்குகளைஐ பறிமுதல் செய்தனர். ஜூன் மாதத்தில் 930 கிலோ 229 கிராம் போதைப் பொருட்களை கைப்பற்றி அழித்தனர். மிசோரம் காவல் துறையினரின் இந்த கடமை மற்றும் பணி மீதான அர்ப்பணிப்பு உணர்வு, இங்கிலாந்தை மையமாகக்கொண்டு இயங்கும் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. உலகத் தரத்திலான நடவடிக்கைகளை பதிவு செய்து, அவற்றை கௌரவிப்பதே உலக சாதனை புத்தகம் அமைப்பின் முக்கிய நோக்கம். இதற்காக மிகவும் கௌரவம் மிக்க தங்க பதிப்பு 2022 சான்றிதழ்கள் மிசோரம் காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ்களை மிசோரம் காவல் துறை சார்பில் சி.ஐ.டி டி.ஐ.ஜி பூ லால் ஹூலியானா ஃபனாய் பெற்றுக் கொண்டார்.