சிறார்களுக்கு பாதிப்பு இருக்காது

கொரோனா மூன்றாவது அலை வீசலாம், அதில் குழந்தைகளுக்கு பாதிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்பட்டு வரும் சூழலில், பாரதத்தில், 3ம் அலையால் 10 வயதிற்குக் குறைவான சிறார்கள் பாதிக்கப்பட்டாலும், சர்வதேச அளாவுடன் ஒப்பிடுகையில் அது சமமாகவே இருக்கும். அதிகமாக அறிகுறிகள் இருக்காது. அப்படியே இருந்தாலும் மிதமாகவே இருக்கும், காய்ச்சல், சுவாச கோளாறு, வயிற்றுக் கோளாறு போன்ற அறிகுறிகள் காணப்படும் என பிரபல மருத்துவ இதழான லான்செட் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.