அமைச்சரின் மகனுக்கு ஜாமீன் மறுப்பு

உத்தரப் பிரதேசத்தில் உள்ள லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் திகுனியா என்ற இடத்தில் கடந்த 2021ல் நடந்த விவசாயிகள் போராட்டத்தின்போது அந்த கூட்டத்துக்குள், வேகமாக வந்த கார் ஒன்று உள்ளே புகுந்தது. இதில் 8 பேர் உயிரிழந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் கார் ஓட்டுனர் மற்றும் பா.ஜ.க தொண்டர்கள் இருவரை அடித்துக் கொன்றனர். அந்த வாகனத்தில் பயணம் செய்த மத்திய அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா தற்போது சிறையில் உள்ளார். அவரது ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது உத்தரப் பிரதேச அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் கரிமா பிரசாத், ‘‘இந்த குற்றம் கடுமையானது. இதில் குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கினால் அது சமூகத்துக்கு தவறான தகவலை அளித்துவிடும்’’ என அச்சம் தெரிவித்தார். ஆஷிஸ் மிஸ்ராவின் வழக்கறிஞர் முகுல் ரோத்கி, ‘‘மனுதாரர் ஓராண்டுக்கும் மேலாக சிறையில் உள்ளார். இந்த வழக்கு முடிய 7 ஆண்டுகளுக்கும் மேல் ஆகும்’’ என்றார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் ஜாமீன் மனு மீதான உத்தரவை ஒத்திவைத்தனர்.