அமைச்சருக்கு கத்திக்குத்து

மாலத்தீவின் தலைநகரான மாலே தெருவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அலி சோலிஹ், தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எங்கிருந்தோ வந்த முஸ்லிம் பயங்கரவாதி, தனது கையில் வைத்திருந்த கூர்மையான கத்தியை கொண்டு அமைச்சரை நான்கு முறை குத்தவும் கழுத்தை அறுக்கவும் முயற்சித்தார். இருப்பினும் சுதாரித்து கொண்ட அமைச்சர் சோலிஹ், உடனடியாக தனது கைகளால் தாக்குதலை தடுத்தார். இதனால் அவரது கையில் கத்திக்குத்து ஏற்பட்டு பலத்த காயம் ஏற்பட்டது. தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்ட அமைச்சர் அங்கிருந்து தப்பித்தார். அந்த பயங்கரவாதி பின்னர் அங்குள்ல மக்களிடம் உள்ளூர் மொழியில் பேசியதுடன் குரான் வசனங்களையும் முழக்கமிட்டார். ஹுல்ஹுமாலேயில் உள்ள மருத்துவமனையில் அமைச்சருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே தாக்குதல் நடத்திய நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை. சோலிஹ் மாலத்தீவின் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சராகவும் ஜும்ஹூரி கட்சியின் செய்தித் தொடர்பாளராகவும் உள்ளார். முன்னதாக, கடந்த மே 2021ம் தேதி மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் தாக்கப்பட்டார். நஷீத் கார் அருகே நிறுத்தப்பட்டிருந்த பைக்கில் வெடிகுண்டு வைக்கப்பட்டு தாக்குதல் காரர்கள் வெடிக்க செய்யப்பட்டன. இந்த தாக்குதலில் காயமடைந்த நஷீத் விமானம் மூலம் ஜெர்மனிக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாகவே மாலத்தீவில் முஸ்லிம் பயங்கரவாதிகளின் தாக்குதல், உலகளாவிய பயங்கரவாத அமைப்புகளுக்கான ஆட்சேர்ப்பு ஆகியவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அரசும் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.