விதிமீறலை நியாயப்படுத்தும் அமைச்சர்

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்தியில், “ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வாகச் செலவுகளுக்காக, ஹிந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி, கோயில்கள் வருமானத்திலிருந்து, 12 சதவீதம் ஒதுக்கப்படுகிறது. அதற்கு மேல், கோயில் நிதியை எடுத்து, வாகனங்கள் வாங்குவது என்பது விதி மீறலாகும். கோயில் நிதியை அறநிலையத் துறையின் இதர செலவுகளுக்குப் பயன்படுத்தக் கூடாது என்று மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றமே கூறியிருக்கும் நிலையில், சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், கோயில் நிதியில் வாகனங்கள் வாங்கியிருக்கிறோம் என்று அந்த விதிமீறலை நியாயப்படுத்தியிருக்கிறார். அமைச்சரின் இந்தச் செயல் வன்மையான கண்டனத்துக்குரியது. அறிவாலய அரசின் இத்தகைய விதிமீறல்களை எதிர்த்தே, அரசின் பிடியிலிருந்து கோவில்களை விடுவிக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க சார்பாக வலியுறுத்தி வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.