மினி பாகிஸ்தான் என்றவர் கைது

மத்தியப் பிரதேசம், ரேவா மாவட்டத்தின் குர் பகுதியைச் சேர்ந்தவர் அப்ரார் கான். இவர் ஓமானில் பணிபுரிந்துவிட்டு தாய் நாடு திரும்பியவர். தனது முகநூலில் இவர், முஸ்லிம்களின் ஆதிக்கம் நிறைந்த தன் கிராமத்தை குறித்து கூறுகையில், அதனை ‘மினி பாகிஸ்தான்’ என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்த புகாரில், அவர் மீது, ஐ.பி.சி பிரிவு 153, தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கான் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், அவரது பதிவுகளை லைக் செய்தவர்கள் குறித்தும் விசாரித்து வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம், அந்த கிராமத்தை மினி பாகிஸ்தான் என்று அழைக்க வேண்டாம் என்று அந்த கிராமத்தினரையும் அண்டை கிராமங்களில் உள்ள மக்களையும் சந்தித்து அறிவுறுத்துவோம் எனவும் தெரிவித்தது காவல்துறை.