ராணுவ வேலை விழிப்புணர்வு

தமிழக பள்ளி கல்வித் துறையின், நாட்டு நலப்பணி திட்டமான என்.எஸ்.எஸ்., பிரிவு இணை இயக்குனர் அமுதவல்லி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றிக்கை ஒன்றில், ‘இந்திய கடற்படையில் அதிக வேலைவாய்ப்பு உருவாகி உள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்தவர்கள், இந்திய கடற்படை பணியில் சேர, நுழைவு தேர்வு எழுதி தேர்ச்சி பெற முடியும். தமிழகத்தில் இருந்து கடற்படையில் இணைவோர் எண்ணிக்கை 2 சதவீதம் மட்டும்தான். தமிழக மாணவர்களுக்கு பாதுகாப்பு படையில் சேர்வதற்கான விழிப்புணர்வு குறைவாக உள்ளது. எனவே, ராணுவத்தில் பணியில் சேர்வதற்கான தேர்வு முறைகள் குறித்த விழிப்புணர்வை பள்ளிகள் மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்’ என தெரிவித்து உள்ளார்.