மாரிதாஸ் கைது

முதுகுளத்தூர் மணிகண்டன் மரணம் குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்டதாகக்கூறி, மாரிதாசை மதுரையில் அவரது இல்லதில் வைத்து காவல்துறை சம்மன் இல்லாமல் கைது செய்துள்ளது. அவர் கைதுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி பா.ஜ.கவினர், ஹிந்து அமைப்பினர், பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். முதுகுளத்தூர் மணிகண்டன் விவகாரம் என்பது இதற்கு காரணமாக கூறப்பட்டாலும், அவர் தொடர்ந்து தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் உட்பட பல கட்சிகள், தேசப் பிரிவினைவதிகள், பயங்கரவாத ஆதரவாளர்கள், தேசத்திற்கெதிரான வெளிநாட்டு சதிகாரர்கள், இவர்களுக்குள் உள்ள ரகசிய தொடர்புகள் குறித்து பல்வேறு வீடியோக்களை சமூக ஊடகங்களில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இதனால் அவர்களின் உண்மை முகம் மக்களுக்கு வெளிச்சம்போட்டு காட்டப்படுகிறது. இவருக்கு பலமுறை இவர்களால் கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டுள்ளன. பல வழக்குகளும் பதியப்பட்டு உள்ளன. இந்நிலையில், இந்த கைது ஆளும் தி.மு.க அரசின் சதியாக இருக்குமோ என பொதுமக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.