ஆறுதல் கூறிய மன்மோகன் வைத்யா

கேரளா பாலக்காடு மாவட்டம் எலப்புள்ளி ஆர்.எஸ்.எஸ். தொண்டர் சஞ்சித், முஸ்லிம் பயங்கரவாதிகளால் அவரது மனைவியின் கண் எதிரிலேயே மிகக் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, ஆர்.எஸ்.எஸ். ஸஹ சர்கார்யவாஹ் டாக்டர் மன்மோகன் வைத்யா, மற்ற கேரள ஆர்.எஸ்.எஸ் அமைப்பினருடன் இணைந்து நேற்று சஞ்சித்தின் வீட்டிற்கு சென்று அவரது மனைவி மற்றும் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். கொலை வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ. விசாரணை செய்திட முன்வர வேண்டும் என்றும் கோரியுள்ளார். கேரளத்தில் கடந்த 50 வருடங்களாக இவ்வகையான படுகொலைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேவகர்கள், பா.ஜ.க, பி.எம்.எஸ், ஏ.பி.வி.பி. தொண்டர்கள் என 300க்கும் மேற்பட்டோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் முஸ்லிம் பயங்கரவாத குழுக்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.