மத மாற்றத்தைத் தடுத்தவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகாவில் அமைந்துள்ள திம்மியம்பட்டி கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் கணேஷ் பிரபு. இந்த கிராமத்தில் வசிக்கும் மக்களை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்ற, ஒரு கும்பல் பிரசாரம் செய்தது. இதையறிந்த கணேஷ் பிரபு, அந்த கிறிஸ்தவ மத மாற்ற கும்பலை கண்டித்துள்ளார். அந்த மதமாற்றக் கும்பல் காவல் நிலையத்தில் கணேஷ் பிரபு மீது பொய்யான புகார் அளித்தது. இதனையடுத்து தி.மு.க அரசின் ஏவல்துறையாக செயல்படும் காவல்துறை, அங்கு என்ன நடந்தது என்பதை முறையாக விசாரிக்காமல் கையில் கிடைத்த பொய்யான புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிந்து கணேஷ் பிரபுவை கைது செய்து சிறையில் அடைத்தது. இதைக் கண்டித்து, திம்மியம்பட்டி கிராம மக்கள் தங்களின் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பை வெளிப்படுத்தினர். புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராடிய பொதுமக்களையும் காவல்துறை கைது செய்தது.