மதரசா ஆசிரியர்கள் கைது

நீலகிரியைச் சேர்ந்த இர்ஷாத் அலி மற்றும் வாவனூரைச் சேர்ந்த ஃபசல் ஆகிய முஸ்லிம் ஆசிரியர்கள் கேரளாவில் திருமிட்டக்கோடு கருகாபுத்தூரில் உள்ள மதரசாவில் பணியாற்றி வந்தனர். அங்கு மதரஸா மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த புகாரின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களால் மேலும் பல மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.