மதராசா ஆசிரியருக்கு 67 ஆண்டு சிறை

கேரளாவில் கடந்த ஜனவரி 2020ல் எர்ணாகுளத்தையடுத்த அலியார் பகுதியில் உள்ள ஒரு மதரசாவில் படித்துவந்த 11 வயது சிறுவனை மதரசா ஆசிரியர் ஒருவர் அங்குள்ள அறையில் அடைத்து பலமுறை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும், ஆபாச வீடியோக்களை அலைபேசியில் பார்க்க தூண்டியதாகவும் அந்த சிறுவன் தன் குடும்பத்தினர் மற்றும் மற்ற ஆசிரியர்களிடம் புகார் தெரிவித்தான். சிறுவனின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், அந்த மதரசா ஆசிரியர் கைது செய்யப்பட்டார். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்றது. இவ்வழக்கை விசாரித்த பெரும்பாவூர் போக்சோ நீதிமன்றம், அந்த மதரசா ஆசிரியருக்கு 67 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கேரளாவில் வழங்கப்பட்ட மிக நீண்ட சிறைத்தண்டனைகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.