மதரஸா ஆசிரியர் கைது

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சந்தோஷ் நகரில் உள்ள மதரஸாவில் ஆசிரியராக பணிபுரியும் ஒரு மதகுரு, அங்கு கல்வி பயிலும் 14 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இரண்டு மாதங்களாக இந்த பாலியல் தொல்லை தொடர்ந்து வந்த நிலையில், இது குறித்து யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதால், தனக்கு நேர்ந்த கொடுமையை அச்சிறுவன் யாரிடமும் சொல்லவில்லை. மேலும், மதரஸாவில் படிக்கும் இதர மாணவர்களிடமும் அந்த சிறுவன் பேசக் கூடாது என்று மிரட்டி வைத்திருந்தார். ஒருநாள் அந்த மாணவன் மற்ற மாணவருடன் பேசுவதைப் பார்த்த மதரஸா ஆசிரியர், அந்த மாணவரை மிரட்டினார். இதனால் பயந்துபோன சிறுவன், தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து தனது அத்தையிடம் தெரிவித்தார். சிறுவனின் அத்தை, உடனடியாக சந்தோஷ் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து விசாரணை நடத்திய காவல் அதிகாரிகள், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து மதரஸா ஆசிரியரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.