மேற்குலகில் லவ் ஜிஹாத்

ஐரோப்பிய நாடுகள், இங்கிலாந்து ஆகிய நடுகளை சேர்ந்த மக்களும் முஸ்லிம்களின் ‘லவ் ஜிஹாத்’ சீர்குலைப்பிற்கு அதிகளவில் பலியாகி வருகின்றனர். அதிக அளவிலான அகதிக் குடியேற்றங்கள், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து பணிக்கு சென்றவர்களால் அங்கு மதமாற்றங்கள், லவ் ஜிஹாத், வன்முறைகள், கற்பழிப்புகள் போன்றவை சமீப காலமாக அதிகரித்து வருவதை அங்கு தினமும் பதிவாகும் கொடூரமான வழக்குகளின் எண்ணிக்கை உணர்த்துகிறது. அவ்வகையில், சமீபத்தில் கிரீஸ் நாட்டின் லரிசாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் அடித்தளத்தில் 35 வயது பெண் ஒரு மாதத்திற்கு முன்பு இறந்து கிடந்தார். பாதிக்கப்பட்டவரின் சடலம் சிதைந்த நிலையில் காணப்பட்டதால், இது நோய் காரணமாக ஏற்பட்ட மரணமாக இருக்கலாம் என ஆரம்பத்தில் காவல்துறையினர் கருதினர். எனினும், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. இதனையடுத்து விசாரித்தபோதுதான் பாகிஸ்தானிய காதலனால் அவர் கொல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த பாகிஸ்தானியரை காவலர்கள் அவரை தேடி வருகின்றனர். இதேபோல இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு கொடூரமான வழக்கில், 13 வயது ஆங்கிலேய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் காசர் உசேன், சையத் ஷபீர், அப்பாஸ் உசேன் உள்ளிட்ட 24 முஸ்லிம் ஆண்களை காவலர்கள் கைது செய்தனர். அவர்கள் அனைவருக்கும் வயது 35க்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு வழக்கில், குரானை அவமரியாதையாகப் பேசியதாகக் கூறி 17 வயது சிறுமி நிகோலெட்டா, தனது பாகிஸ்தானிய காதலனால் கொல்லப்பட்டார். இங்கிலாந்தில் கடந்த 2018ம் ஆண்டில் மட்டும் சுமார் 19,000 பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது. சமீபத்தில் லெய்செஸ்டரில் ஹிந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலும், அந்த விவகாரத்தில் பிரிட்டன் காவல்துறை கண்மூடித்தனமாக இருந்த விதமும் இங்கிலாந்தில் நிலைமை எவ்வளவு விபராதமாக உள்ளது என்பதை உணர்த்துகிறது. ஜிஹாத் மூலம் கிரீஸைக் கைப்பற்ற விரும்பும் துருக்கியின் முன்னாள் அதிபர் துர்குட் ஓசல், 1990களில் பேசுகையில், கிரேக்கத்தைப் பெறுவதற்கு அவர்கள் போருக்குச் செல்ல வேண்டியதில்லை என்றும் சில மில்லியன் புலம்பெயர்ந்தோரை அனுப்பினால் அது முடிவுக்கு வரும் என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வங்கதேசம், ரோஹிங்கியா முஸ்லிம்கள் பாரதத்தில் சட்டவிரோதமாக நுழைந்து எவ்வாறு அழிவை ஏற்படுத்துகிறார்களோ, அதேபோன்று பாகிஸ்தானிய மற்றும் ஆப்கானிஸ்தானிய முஸ்லிம்களும், சிரிய அகதிகளும் ஐரோப்பாவில் அழிவை ஏற்படுத்தி வருகின்றனர்.