மத்தியப் பிரதேசத்தில் லவ் ஜிஹாத்

எளிதில் பாதிக்கப்படக்கூடிய முஸ்லிமல்லாத பிற மதப் பெண்களைக் குறிவைத்து அவர்களை கவர்ந்திழுத்து, மூளைச்சலவை செய்து அவர்களை வலுக்கட்டாயமாக இஸ்லாமிற்கு மதம் மாற்றுவது. பிறகு அந்த பெண்களை சித்திரவதை செய்து, பாலியல் பலாத்காரம் செய்து கடைசியில் அவர்களை கொலை செய்வது அல்லது கைவிடுவது போன்ற கொடுமையான செயல்முறைகள் அடங்கிய ‘லவ் ஜிஹாத்’ அச்சுறுத்தல்கள் தற்போதைய காலகட்டத்தில் சமூகத்தில் மிக வேகமாகப் பரவி வருகிறது.

அதில் ஒன்றாக, ஒரு மைனர் ஹிந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கட்டாய மதமாற்றம் செய்த வழக்கில் அரசுப் பள்ளி ஆசிரியர் ஷமிம் கான் என்பவரை மத்தியப் பிரதேச காவல்துறையினர் திங்கட்கிழமை கைது செய்தனர். சுயராஜ்ய பத்திரிகையாளர் ஸ்வாதி கோயல் ஷர்மாவின் கூற்றுப்படி,  ஷமிம் கான் ஒரு ஏழை ஹிந்து பெண்ணுடன் நட்பாக பழகி லவ் ஜிஹாத் வலையில் வீழ்த்தினார். பின்னர் அவரை முஸ்லிம் மதத்திற்கு மாற்றியுள்ளார். அவர்களின் பாலியல் செயல்பாடுகளை டுவிட்டரிலும் வெளியிட்டார்.

இதனுடன் நிற்காமல், அந்த பெண்ணின் 16 வயது மகளையும் பாலியல் பலாத்காரம் செய்தார் ஷமிம் கான். இதனால் அந்த சிறுமி, 11ம் வகுப்பில் படிப்பை பாதியில் விட்டுவிட்டார். பின்னர் அந்த சிறுமியையும் முஸ்லிம் மதத்திற்கு மாறுமாறு அழுத்தம் கொடுத்து வந்தார் கான். இதைத் தொடர்ந்து அந்த சிறுமி, ஷமிம் கானுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர், ஷமிம் காந் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதே மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூரில் இந்த மாத தொடக்கத்தில்,  ருபாப் ஷா என்ற முஸ்லிம் நபர், தனது இந்து மனைவியை இஸ்லாத்திற்கு மாற்ற வற்புறுத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

மார்ச் 2020ல், சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான மத்தியப் பிரதேச அரசு, ‘லவ் ஜிஹாத்’ மற்றும் பிற சட்டவிரோத மதமாற்றங்களை குற்றமாக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது. 2021ல் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம், கட்டாய மதமாற்றத்திற்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கிறது.