கர்நாடகாவில் லவ் ஜிஹாத்

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாபுராவைச் சேர்ந்தவர் இளம் இந்து பெண்ணான ஷில்பா. இவரை  அஜீஸ் என்ற முஸ்லிம் காதலிப்பதாகவும் திருமணம் செய்துக்கொள்வதாகவும் கூறி 3 ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளர். மேலும், அவருக்கு தெரியாமல் எடுக்கப்பட்ட அவரது ஆபாச படங்களை காட்டி ஷில்பாவை முஸ்லிமாக மதம் மாறும்படி மிரட்டியுள்ளார். மேலும் அஜீசுக்கு ஏற்கனவே சல்மா என்ற பெண்ணுடன் திருமணமானதையும் மறைத்துள்ளார். இந்த செயல்களுக்கு சல்மாவும் உடந்தையாக இருந்துள்ளார். இதனால் மனம் உடைந்த ஷில்பா, எலி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். ஷில்பா தற்கொலை செய்வதற்கு முன் எழுதிய கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். ஷில்பாவின் மரணம் தற்கொலையல்ல; இது ஒரு லவ் ஜிஹாத்’ செயல் என்று ஹிந்து அமைப்பினரும் அவரது குடும்பத்தாரும் குற்றம் சாட்டினர். அஜீஸ் மற்றும் அவரது மனைவியை உடனடியாக கைது செய்ய வேண்டும், இந்த வழக்கின் விசாரணையை சி.ஐ.டி வசம் ஒப்படைக்க வேண்டும், ஷில்பாவின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலாளர் தினேஷ் மெண்டன் வலியுறுத்தியுள்ளார்.