ராகுல் வந்துவிட்டு போகட்டும்

கர்நாடக மாநிலம் மைசூரிவில் செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, “கர்நாடகாவில் காங்கிரஸ் வீழ்ச்சி அடைந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் அனைத்து அடுக்குகளிலும் ஊழல்கள் நிறைந்துள்ள நிலையில், அவர்கள் எனக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு பிரசாரத்தைத் தொடங்கியுள்ளனர். காங்கிரஸ் தலைவர்கள் சுயநலவாதிகள். மாநிலத்தின் நலனை தியாகம் செய்யத் தயாராக இருக்கும் அவர்கள்தன், மாநில அரசுக்கு களங்கம் ஏற்படுத்தி அதன்மூலம் ஆட்சிக்கு வர முயற்சிக்கின்றனர். எதிர்கட்சியினர் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல், அதுகுறித்து விவாதிக்காமல், மலிவான பிரசாரங்களில் ஈடுபடுகின்றனர். காங்கிரசின் பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தி கர்நாடகாவிற்கு வந்துவிட்டு போகட்டும். கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் ராகுல் காந்தி வந்து சென்ற இடங்களில் எல்லாம் தமரை மலர்ந்தது” என கூறினார்.