இல. கணேசனுக்கு கூடுதல் பொறுப்பு

மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜக்தீப் தங்கரை பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக அறிவித்தது. இதையடுத்து அவர் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து, மணிப்பூர் ஆளுநரான இல. கணேசனுக்கு மேற்கு வங்கத்தின் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ளது. நிரந்தர ஏற்பாடு செய்யும்வரை, இல. கணேசன் மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராக கூடுதல் பொறுப்புகளை மேற்கொள்வார் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.