செங்கோலை தயாரித்த உம்மிடி பங்காரு குடும்பத்தினருக்கு பாராட்டு

இந்திய சுதந்திரத்தின்போது பிரதமர் நேருவிடம் வழங்கப்பட்ட செங்கோல், தற்போது புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த செங்கோலை வடிவமைத்து, உருவாக்கிய உம்மிடி பங்காரு செட்டி குடும்பத்தினருக்கு இந்த நிகழ்ச்சியில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. இதில் உம்மிடி எத்திராஜுலு, அவரது சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்றனர்.