ஹிந்து கோயிலை சேதப்படுத்திய காலிஸ்தானிகள்

ஆஸ்திரேலியா டுடே அறிக்கையின்படி, ஆஸ்திரேலியாவில்ன் நியூ சௌத் வேல்ஸ் நகரில் உள்ள புகழ்பெற்ற பி.ஏ.பி.எஸ் சுவாமிநாராயண் கோயிலை கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலையில் காலிஸ்தானி பிரிவினைவாதிகள் சேதப்படுத்தியுள்ளனர். கோயிலை சேதப்படுத்தி, கோயிலின் சுவர்களில் “மோடியை பயங்கரவாதியாக அறிவிக்கவும் (பிபிசி)” என்று எழுதினர். கோயிலின் வாயிலில் காலிஸ்தான் கொடியையும் தொங்கவிட்டனர். தினசரி இந்த கோயிலுக்கு பிரார்த்தனை செய்ய வந்தவர்கள் இதனை பார்த்து புகார் அளித்த பிறகு இது வெளிச்சத்திற்கு வந்தது. கோயில் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, அவர்கள் சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து நியூ சௌத் வேல்ஸ் காவல் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகளை கோயில் நிர்வாகத்தினர் விசாரணைக்காக வழங்கியுள்ளனர். ஆஸ்திரேலியாவில் காலிஸ்தானி பிரிவினைவாதிகளால் சேதப்படுத்தப்பட்ட 6வது ஹிந்து கோயில் இது.